பக்கங்கள்

14 ஜூலை 2011

தீவகத்திற்கு செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

தீவகப்பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது. இதேவேளை தீவகத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் யாழ் நகரிற்கு வரமுடியாததாக இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முகமட் தலைமையில் யாழ் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்தார். மேலும் தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள வேட்பாளர்களுக்கும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின்போது, வேட்பாளர்களுக்கு முழுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தேர்தல் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப் பட வேண்டும் எனவும் மாவை தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், பொலிசாரால் பக்கச் சார்பற்ற நிலையில் செயலாற்ற முடியாது ஒரு பக்கமாகவே செயலாற்றுகிறார்கள். கடந்த தேர்தல் கலந்துரையாடலின் போது நல்லூர்ப் பகுதியில் அமைச்சரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், இதனை அகற்றுமாறு தெரிவித்துள்ள போதும் இதுவரை அகற்றவில்லை. எனது வீட்டில் அதிகாலை வேளை கற்கள், கழிவுகளால் கொட்டப்பட்டுள்ள போதும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. எனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில்தான் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ளது.இவ்வாறான நிலையில் அதிகாலை வேளை வந்தவர்களை ஏன் விசாரணை செய்யவில்லை.
நெடுந்தீவிற்கு உள்ளுராட்சி சபைக்குப் பொறுப்பாக கிழக்கு மாகாண ஆளுநரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலை வேறெங்கிலும் இல்லை எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.