பக்கங்கள்

14 ஜூலை 2011

சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பே கிடையாது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு பொதுமன்னிப்போ, தண்டனை சலுகைகளோ வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய பிரிவுகளின் கீழ் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றம் தண்டனை விதிப்பதற்கு முன்னர், சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலம், தண்டனைக் காலத்துடன் இணைக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.