பக்கங்கள்

08 ஜூலை 2011

விரிவுரையாளர்கள் போராட்டம்,பின்னணியில் பிளேக் என்கிறார் விமல்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே செயற்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த போராட்டத்தை விரிவுரையாளர்கள் அல்லாத சிறுபான்மை குழுவே மேற்கொண்டு வருகின்றது. ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால் இவர்கள் கேட்கும் சம்பள உயர்வு விகிதம் சாத்தியமற்றது.நாட்டை சீர்குலைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்கலைகழகங்களில் இருந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.