பக்கங்கள்

10 ஜூலை 2011

மலேசியாவில் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கைதாம்.

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரிடம் மலேசிய காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் மலேசிய அரசாங்கம், தகவல்களை பரிமாறும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இந்த கைது தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் டொக்டர் டி.டி. ரணசிங்கவோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்லவோ எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.