பக்கங்கள்

22 ஜூலை 2011

பசில் ராஜபக்சவை கொல்ல மகிந்தவின் மகன் முயன்றாரா?

மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷ மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷவை சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து. இதன் பொழுது வேகமாகச் செயற்பட்ட மகிந்தர் தனது மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அத்தோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்து கொண்ட மகிந்த மற்றும் கோத்தபாயவும் உன்மேல் நாங்கள் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரியவருவதாக அவ்விணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அலரிமாளிகையில் வைத்தே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடும்பமாகச் சேர்ந்து மதுபோதைக் களியாட்டத்தில் ஈடுபட்டவேளை, அளவுக்கதிகமாகக் குடித்திருந்த யோசித ராஜபக்ஷ பாதுகாப்புக்காக இருந்த துப்பாக்கி ஒன்றை பசில் மீது நீட்டியதாகவும் இவர்களுக்கு இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.