பக்கங்கள்

11 ஜூலை 2011

தொடரூந்து மோதி காதலர்கள் பரிதாப சாவு!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதிய 34 வயது பெண்ணும் அவரது காதலர் என சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றது. ரயிலுடன் மோதிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த பெண் கொழும்பு 13ஐ சேர்ந்த முத்தாஸ் (34) என்பவராவார். அவரது காதலர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. பொலிஸ் பேச்சாளர் பிரசன்ன ஜயகொடி இது பற்றி மேலும் தகவல் தருகையில், இச்சம்பவத்தை பார்த்த எவரது சாட்சியமும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியதுடன் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான மரண விசாரணைகள் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.