பக்கங்கள்

05 ஜூலை 2011

வடபகுதி செல்ல கட்டுப்பாடுகள் தளர்வு என அறிவிப்பு.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளவர்கள் இலங்கையின் வடபகுதிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று திங்கட்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கிற்கு பயணம் செய்பவர்கள், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்ற பயண அனுமதி ஆவணங்களை ஓமந்தை சோதனை சாவடியில் காட்ட வேண்டிய தேவை இனிமேல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளதைடுத்து, வெளிநாட்டு கடவுச்சீட்டுக் கொண்டவர்களுக்கான பயணக்கட்டுப்பாடு இனிமேல் தேவையில்லை எனக் கருதுகிறோம்’என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.