பக்கங்கள்

03 ஜூலை 2011

சிங்களத்தின் பொய் பரப்புரையை முறியடிக்க அணி திரளும் பிரான்ஸ் தமிழர்கள்.

பிரான்ஸ் மண்ணில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பெரு நிகழ்வுகளில் ஒன்றாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில் வழமைபோல் இம்முறையும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகள், கலையரங்குகள்,கண்காட்சிகள்,உணவகங்கள்,வர்தக நிலையங்கள்,சமூக அமைப்பு மையங்கள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கோடைக் குதூகலமாக இந்நிகழ்வு அமைகின்றது.
50க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் இடம்பெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவில் இம்முறை கலையரங்கை சிறப்பிக்க கனாடாவின் மேற்கத்திய இசைக் கலைஞர் சிக்காடி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் தமிழீழ தேசிய அட்டைக்கான பதிவுகளோடு தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான மையமும் நிறுவப்படுகின்றது. இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கள் பாலசந்திரன் அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபடுதலை � ஒற்றுமையை சிதைக்க சிங்களம் பல்வேறுபட்ட வகையிலும் நாசாகார வேலைகளைச் செய்கின்றது. இவற்றையெல்லாம் முறியடித்து எமது ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்த பெரு நிகழ்வாக தமிழர் விளையாட்டு விழாவைக் கருத்தில் கொள்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.