பக்கங்கள்

28 ஜூலை 2011

விபத்தில் சிக்கி காதலி பலி!காதலன் கைது.

தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் விபத்தில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலியாகிய சம்பவமொன்று பிபிலை, லுனுகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தை அடுத்து குறித்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பிபிலை, மெதகம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.லக்மாளி (வயது 20) என்ற யுவதியே உயிரிழந்தவராவார். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று தனது காதலனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.