பக்கங்கள்

22 ஜூலை 2011

யாழில் மூதாளர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்!

யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியில் அடிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருதாவது,
யாழ். குருநகர் மவுண் காமம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தையான சில்வஸ்ரர் ஜேசுதாஸன் என்ற முதியவர் நேற்று மாலை அண்மையில் உள்ள தவறணைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற இருவர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கைலாச பிள்ளையார் கோபில் பின்வீதியில் அவரது சடலம் அடிகாயங்களுடன் காணப்பட்டுள்ளது. சடலத்தில் அவர் அணிந்திருந்த மோதிரத்தினைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.