பக்கங்கள்

06 நவம்பர் 2012

அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை!

இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கரூர் அருகே ராயனூர் என்னும் இடத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ஜெயபிரகாஷ் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையை தடுக்க முயன்ற ஜெயபிரகாஷின் தம்பியான கலைச்செல்வன் என்பவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கரூர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அகதி முகாமையை சேர்ந்த மற்றுமொருவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.