பக்கங்கள்

23 நவம்பர் 2012

தமிழ் யுவதிகள் விரும்பி படையில் சேர்ந்ததாக மிரட்டி கையொப்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களின் சொந்த விருப்பத்திலேயே இணைத்துக் கொள்ளப்பட்டதாக பாரதிபுரம் மக்களிடம் படையினர் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நேற்றைய தினம் இவ்வாறு படையினர் கையெழுத்து வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்திற்கு தமிழ் இளைஞர், யுவதிகள் படையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மக்களாகவே படையில் இணைகின்றார்கள் என்று சர்வதேசத்திற்கு காட்டும் நோக்கில் இந்த கையொப்ப வேட்டையை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருவது குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.