பக்கங்கள்

24 நவம்பர் 2012

தீவகம் பெற்றெடுத்த தளபதி றீகன் அண்ணா!

தீவகம் கரம்பொன்னை சொந்த இடமாக கொண்டவர் தளபதி றீகன் அண்ணா.
அவர் தீவகத்தின் படையணித் தளபதியாக இருந்த காலம் என்பது என் கண் முன் இன்றும் காட்சிகளாக பரினமித்துக்கொண்டிருக்கிறது.சொல்லும் செயலும் ஒருங்கே அமையப் பெற்ற றீகன் அண்ணா,மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.சின்ன ஒரு பிரச்சனை என்றால் கூட பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவும் அவரது அந்த பண்பான செயற்பாடுகளை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.தங்கள் மகனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக அவரது தாய்,தந்தையர் விளங்கினர்.ஒவ்வொரு போராளிகளையும் தங்கள் மகனை விடவும் மேலாக நேசித்தார்கள்.போராளிகளுக்கு சிறு காச்சல் என்றால் கூட ஓடிச்சென்று பார்த்து,தனது கைப்பக்குவத்தில் சமையல் செய்து கொடுத்து அவர்களை மிகுந்த அக்கறையுடன் கவனிக்கும் அந்த தாயாரின் அன்பு என்பது என்றும் மறக்க முடியாதது.போராளிகளுடன் றீகன் அண்ணா வீட்டில் உணவருந்திய பெரும் பாக்கியத்தை நானும் பெற்றிருக்கிறேன் என்பது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று.றீகன் அண்ணா அமைதியான சுபாவம் கொண்டவர்,செயலில் மிகவும் வேகம் கொண்டவர்.ஒழுக்கம்,நேர்மை,வேகம்,விவேகம் என்பவற்றை எப்பவும் றீகன் அண்ணாவிடம் காணலாம்.எங்கள் றீகன் அண்ணா பாசிஷ வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி நெஞ்சில் இடியாய் விழுந்தது!றீகன் அண்ணா காலத்தின் வரலாறு அந்த மாவீரனின் வித்துடல் விதைக்கப்படும் இந்நாளிலே அவருக்கு எமது வீரவணக்கத்தை செலுத்தி அவரது பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.