பக்கங்கள்

09 நவம்பர் 2012

யாழ்ப்பாணத்தில் குடிகாரர்களின் தொகை அதிகரிப்பு!

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகளவான மதுபானம் நுகரப்படுவதாக பிராந்தியத்திற்குப் பொறுப்பான சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வருடாந்தம் 15000 முதல் 20000 வரையிலானவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பருகுவதனால் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். ஏ9 வீதி திறக்கப்பட்டதனைத் தொடர்ந்து மதுபான வகைகளின் பயன்பாடு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். மதுபான பயன்பாட்டினால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.