பக்கங்கள்

10 நவம்பர் 2012

வேலூர் சிறையில் முருகனிடமிருந்து பல பொருட்களை கண்டு பிடித்ததாம் பொலிஸ்!

வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்  முருகனிடமிருந்து, கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க சிறைத்துறை டி.ஜ.ஜி.,கோவிந்தராஜ் தலைமையில் சிறைத்துறையினர், நேற்று, 9 மணி நேரம் சோதனை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முருகனிடமிருந்து கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றினர். கைப்பற்றிய இறுவெட்டை போட்டுப் பார்த்த போது, அதில் உலக வரைப்படம், இலங்கை வரைப்படம் முதல் இரண்டாம் உலகப் போர், இலங்கையில் நடந்த படுகொலைகள், விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்த தகவல் இருந்ததாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அடேங்கப்பா..!முருகன் மறைத்து வைத்திருந்த அணு குண்டை கண்டு பிடிச்சிருக்கிறாங்களே...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.