பக்கங்கள்

25 நவம்பர் 2012

படையினர் அச்சுறுத்துவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் உள்ள தமது ஆதரவாளர்களை படைப் புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்திவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று படைப் புலனாய்வுத்துறையினர் எனக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் இளைஞர்களை மிரட்டியுள்ளனர். மாவீரர் தினத்தையிட்டு நிகழ்வுகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தயாராகிவருவதாகவும் அதற்கு உதவினால் உங்களை கைதுசெய்து நான்காம் மாடிக்கு அனுப்புவோம் என்று மிரட்டி வருகின்றனர். மாவீரர் தினத்தில் துண்டுப் பிரசுரம் மற்றும் நிகழ்வுகளை அவர் செய்ய இருப்பது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதனால் இது தொடர்பில் நீங்கள்தான் மாட்டுவீர்கள் எனவும் அவர்களை மிரட்டியுள்ளனர். படைப் புலனாய்வுத்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களை மிரட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு அச்சுறுத்தல் விடுவதாகவே கருதவேண்டியுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன். மக்கள் மறந்துவரும் விடயங்களை படையினர் ஞாபகமூட்டி மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(மாவீரர் தினம் மக்கள் மறக்கக்கூடிய தினமா அறியநேந்திரா?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.