பக்கங்கள்

10 நவம்பர் 2012

இராணுவத்தை பயன்படுத்தி மனித உயிர்களுடன் விளையாடுகிறது அரசு.

இந்த நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் இராணுவத்தினர் அல்லது விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் மனநிலை தற்போதைய அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அதன் ஒரு திட்டம் நேற்று வெலிக்கடை சிறையில் இடம்பெற்றதென மக்கள் விடுததலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வெலிக்கடை சிறை மோதலில் 30 பேர்வரை பலியானதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். சிறைக்குள் தொலைபேசி, போதை பொருள் இருப்பது உண்மை. அவை சிறைக்குள் செல்லும் வழியை கண்டுபிடித்து தடுக்க வேண்டும். அதைவிடுத்து இராணுவத்தை விடுத்து சோதனை செய்தால் நேற்றுபோல்தான் பலன் கிடைக்கும். மனித உயிர்களுடன் விளையாடும் அரசின் இத்திட்டங்களை கண்டிக்கிறோம். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டும். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.