பக்கங்கள்

27 நவம்பர் 2012

சிங்களப்படையின் கோரத்தாண்டவம் ஆங்கில இணையத்தில் வெளியாகியுள்ளது!

சமீபத்தில் வெலிகடைச் சிறையில், கைதிகள் தப்பிக்கிறார்கள் என்ற போர்வையில் பலர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப் புகைப்படங்கள் பல வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர், சுட்டுவிட்டு பின்னர் கால்களால் உதைவது போன்ற படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட தமிழ் இளைஞரை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சுட்ட பின்னர், உயிர் உள்ளதா இல்லையா என்று பார்க்க, காலில் உதைவது போன்று இப் படத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று சொல்லப்படும் அதேவேளை, இப் புகைப்படமானது இராணுவத்தினர் வன்னி நோக்கி முன்னேறிச் செல்லும்போது எடுக்கப்பட்டது என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இப் புகைப்படத்தை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளமை, பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கையில் உள்ள சில கடும்போக்குள்ள சிங்கள இணையங்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அத்தோடு வெலிகடைச் சம்பவங்களோடு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களை ஒப்பிட்டு, இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே இவ்வாறாக புகைப்படங்கள் சில ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருவதாக, சில சிங்கள இணையங்கள் குற்றஞ்சுமத்தியும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.