பக்கங்கள்

11 நவம்பர் 2012

பொலிஸ் - மக்கள் மோதலில் 11 பேர் காயம்!

ஹொரணை, மொரககேன்ன பிரதேசத்தில் போலீசாருக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 3 பொலிஸாரும் 8 பிரதேசவாசிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் நடந்த விசாரணைகளை அடுத்து மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.