பக்கங்கள்

09 நவம்பர் 2012

உறக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள மாணவன்!அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

அவுஸ்திரேலியாவின் பேர்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேர்த்தில் பகுதி நேர வாகன செலுத்துனராக பணியாற்றிய 28 வயதுடைய இலங்கை மாணவர் சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்வர் இன்று (09) பேர்த் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மது அருந்திய பின் உறக்த்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.(எங்க போனாலும் இவங்கிட குணம் மாறப்போறதேயில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.