பக்கங்கள்

29 நவம்பர் 2012

பிரபல தமிழ் சட்டத்தரணிக்கு பல்லினப் பத்திரிகையாளர் விருது!

ரொறன்ரோவின் பிரபல தமிழ் வழக்கறிஞரும் சமூக சேவையாளருமான திருமதி மெலானி டேவிட் கனடா பல்லினப் பத்திரிகையாளர் சங்கத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஒன்ராறியோவின் ஆளுனர் டேவிட் ஓன்லி அவர்களினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மெலானி டேவிட் அவர்கள் வழக்கறிஞர் என்பதைவிடவும்,வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வருட நடுப்பகுதியில் கனடாவில் தலைசிறந்த 25 குடிவரவாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட மெலானி டேவிட் தான் சிறீலங்காவில் ஒரு சட்டத்தரணியாக வருவதற்கான படிப்புக்களைத் தொடர்ந்து கொண்டிருந்த போது இறுதிப் பரீட்சை நெருங்கிய போது தங்களது கேள்வித்தாள்கள் எரிக்கபட்டு இறுதிப் பரீட்சையில் தோற்ற முடியவில்லை என்ற வேதனை தனக்கிருந்தாலும், கனடாவில் தான் அதனைச் சாதித்ததாகவும்,கனடாவில் முயற்சியுடையவர்களிற்கு வானமே எல்லையென்று தெரிவித்ததுடன்,தான் தனது குடும்பத்துடன் கனடா வந்த புதிதில் தனது இரண்டு சிறு மகள்களிற்கும் தேவையானவற்றையும் செய்து கொண்டு எவ்வாறு அர்ப்பணிப்புக்களுடன் கல்வியை தொடர்ந்தார் என்பதையும் விளக்கியதோடு, இன்று 35 பேருக்கு வேலை வழங்கும் ஒரு நிறுவனமாக தனது நிறுவனம் வளர்ந்து நிற்பதையிட்டு மிகவும் பெருமை கொள்வதாகவும்,கனடாவிற்கு தான் வர எடுத்த முடிவு ஒரு சிறந்த முடிவென்பதையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.