பக்கங்கள்

05 நவம்பர் 2012

கோத்தபாய மற்றும் கருணா குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு இரகசிய விஜயம்!

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட்ட அமைச்சர்கள் பட்டாளமொன்று தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக இணையதள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது கோத்தபாய ராஜபக்ச தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, இலங்கை அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும் அவ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.