பக்கங்கள்

08 நவம்பர் 2012

ஸ்கார்பரோ வீட்டில் தீ!தமிழர் குடும்பம் படுகாயம்!

கிழக்கு ரொறாண்ரோவில் ஒரு வீட்டில் செவ்வாய் நள்ளிரவு திடிரென்று தீ பிடித்தது. இந்தத் தீயில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இருவர் நிலைமை மோசமாக இருக்கிறது. பிர்ச்மவுண்ட் சாலை, லாரன்ஸ் தெரு பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் இலங்கைத் தமிழர் குடும்பம் வசித்து வந்தது. இந்த வீட்டில் மூன்று தலைமுறையினர் குடியிருக்கின்றனர். அப்பா, அம்மா அவர்களின் இரண்டு மகன்கள்,மகள், மருமகன் மற்றும் 22 மாதப் பேரக் குழந்தை என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். இரவு ஒரு மணி சுமாருக்கு தீ எச்சரிக்கை மணி ஒலித்ததும் குடும்பத் தலைவி சந்திரலீலா சிவபாதம் விழித்து மற்ற குடும்பத்தினரை எழுப்பியிருக்கிறார். ஆனால் அதற்குள் தீ வேகமாய் பரவியிருக்கிறது. ’இப்படியொரு தீயை நான் பார்த்ததேயில்லை. கண் முன் வீடு எரிந்தது மிகவும் பரிதாபகரமான சங்கதி’ என்கிறார் அருகில் வசிக்கும் கிருஷ்ணலீலை வேலுபிள்ளை. ‘குழந்தைக்குப் பரவாயில்லை. அதன் கர்ப்பினி தாய்க்கும் அதிகமில்லை’ என்கிறார் அவர். தீ எச்சரிக்கை மணி ஒலித்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வண்டிகள் வந்து போராடி தீயை அணைத்திருக்கின்றன. வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் முதலில் தீ பிடித்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து வீட்டுக்கு தீ பரவியிருக்கிறது. அந்த வாகனம் முற்றிலும் எரிந்து விட்டது. மொத்த சேதாராம் 300,000 டாலர்கள் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பன்னிரெண்டு தீயணைப்பு வண்டிகளும் 40 தீயணைப்பு வீரர்களூம் சேர்ந்து தீயை அணைத்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.