பக்கங்கள்

24 நவம்பர் 2012

ராஜீவ் கொலை தண்டனைக்கைதிகள் மனுத்தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்காக தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் உயர் நிதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ராஜீவ் கொலை குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இவ்வாறு ஹெபியாஸ் கொர்ப்ஸ் மனுக்களை தனித்தனியாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய சிறைகளில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பி.ரொபர்ட் பாயஸ் மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் இவ்வாறு தனித்தனியாக சென்னை நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தின் 21ம் சரத்திற்கு புறம்பான வகையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் தம்மை தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குறித்த இரண்டு இலங்கையர்களும் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனைக் காலம் 1983ம் ஆண்டு 236, 341 சட்டங்களின் அடிப்படையில் கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக 20 ஆண்டுகள் சிறையில் கழித்தால் அது ஆயுள் தண்டனையாக கருதப்படும் எனவும்,அந்தக் காலத்தை தாம் பூர்த்தி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1998ம் ஆண்டில் பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.அதன் பின்னர் 1999ம் ஆண்டு மே மாதத்தில் இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.