பக்கங்கள்

05 நவம்பர் 2012

சந்திரிகா பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க,ஆடைகளின்றி வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மிகப்பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விசர்பிடித்து ஆடியதால்,அந்த பதவியையும்,கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார் என்று நான் முன்னர் கூறியது தற்போது நடந்து வருகிறது. தற்போது உண்மையில் சந்திரிகாவுக்கு விசர்பிடித்துள்ளது. அவர் தலைவிரி கோலமாக ஆடைகளின்றி வீதியில் ஓடும் நாள் மிக விரைவில் வரும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.