பக்கங்கள்

04 நவம்பர் 2012

ஊடகங்கள் ஊடாக புலிகளின் தாக்குதல் தொடர்கிறது என்கிறார் மகிந்த.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகங்களைப் பயன்படுத்தி தமது போராட்டத்தை புலிகள் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்துக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரிய அளவில் நிதியை செலவிட்டனர் எனவும்  அதேபோன்று போராட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெற்றோரை பராமறிப்பதற்காகவும் அவர்கள் பாரிய தொகையை செலவழித்தாகவும்  தெரிவித்தார். எனினும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஊடகப் பிரச்சாரங்களுக்காக  இந்த நிதியைப் பயன்படுத்தி வருவதாகவும்  உலக ஊடகங்களின் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய அளவிற்கு புலிகளிடம் பணம் இருப்பதாகவும் குறிப்பிட்ட  மகிந்த ராஜபக்ஷ  இந்தப் பணத்தைக் கொண்டு இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.