பக்கங்கள்

13 நவம்பர் 2012

முள்ளிவாய்க்காலில் இளைஞர் மீது படையினர் கடும் தாக்குதல்!

முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சைக்காக கைவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. படையினரால் தான் தாக்கப்பட்டார் என்று அந்த இளைஞர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தைச் சேர்ந்த 29 வயதான சிவராசா பிரபாகரன் என்ற இளம் குடும்பஸ்தரே காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்றுமுன்தினம் தனது வீட்டுக்கு வந்த அம்பலவன் பொக்கணையில் பணியாற்றும் படையினரே் மூவரே, தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள இராணுவ அதிகாரி கேணல் அசோக பீரிஸுக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் நபர்கள் அடையாளங் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர் எனவும், தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் முள்ளிவாய்க்கால் கிராமசேவகர் ஊடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.