பக்கங்கள்

11 நவம்பர் 2012

பயணிகள் பேரூந்து மோதியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி!

சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இ.போ.ச. பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை பளை தர்மக்கேணி தென்னை அபிவிருத்திச் சபை அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. தென்னை அபிவிருத்திச் சபை பணியாளரான ரவீந்திரன் நகுலேஸ்வரி (வயது36) கடமைக்குச் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றது. பளை, தம்பகாமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்னின் கணவருக்கு ஒரு கை இல்லை என்று தெரிவிக்கப் படுகிறது. பளைப் பொலிஸார் பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.