பக்கங்கள்

06 மே 2011

புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தீர்த்தக் கேணியில் மூழ்கிய சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.

யாழ்,தீவகம் புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலய தீர்த்தத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை 03.05.2011 அன்று நடைபெற்றதும் அன்றைய தினம் மாலை சிறுவன் ஞானேந்திரன் எழிலரசனின் சடலம் ஆலய தீர்த்தக் கேணியிலிருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.


ஆனாலும் ஆலயத்தின் கொடி இறக்கப்படும்வரை சிறுவனின் சடலத்தை தூக்கக் கூடாதென சிலர் தடை போட்டதாக அங்கிருந்து ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.அத்துடன் அச்செய்தியை வெளியிட்டவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர் அசெய்தியை தனது வலைப்பூவிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இச்செய்தியை அறிந்ததும் புலம்பெயர் தேசத்தில் வாழும் புளியங்கூடல் மக்கள் பெரும் விசனமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.