பக்கங்கள்

14 மே 2011

ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துச்சொன்னார் விஜய்.

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், பெரும்பான்மை வெற்றி பெற்றிருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களை, திரைப்பட நடிகர் திரு. விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அவ்வாறான சந்திப்புக்கள் ஏதும் நடைபெறவில்லை. ஆயினும் விஜயின் தந்தையார் சந்திரசேகர் இரு தடவைகள் ஜெயலிதாவை நேரில் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டதுடன், இயக்குனர் சந்திரசேகர் நேரடியான தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுகவின் அபார வெற்றி உறுதியானநிலையில், நேற்று மாலை சென்னை போயஸ்கார்டனிலுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு தனது தந்தையார் சந்திரசேகருடன் , நடிகர் விஜயும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.