பக்கங்கள்

09 மே 2011

ஜி.ரி.வி.யின் ஜெர்மன் பொறுப்பாளர் சிவலிங்கம் இலங்கை தூதரகத்தில் இரகசிய சந்திப்பு?

தமிழ் தேசியத்தின் பக்கம் பலமாக நிற்பதாக தம்மை இனங்காட்டி ஜரோப்பிய ஈழத் தமிழ் உறவுகளிடம் பல மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக திரட்டி அந்த பணத்தில் இயங்கி வருவது ஜி.ரி.வி தொலைக்காட்சி. குறித்த தொலைக்காட்சியின் ஜேர்மனி பொறுப்பாளராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேந்த சிவலிங்கம் என்பவர் கடமையாற்றி வருகிறார்.
ஜேர்மனி நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர் கடந்த புதன் கிழமை ஜேர்மனி நாட்டின் தலைநகரம் பிறாங்போட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் இரகசிய சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.
ஆனால் சாம்பல் நிற கோட்டுடன் இலங்கை தூதுவராலயத்தில் இரகசியமாக உள்நுழைந்த சிவலிங்கம் பல மணி நேரம் ஜேர்மனியில் உள்ள புலி ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிவிட்டு வெளிவந்ததாக பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
இது தொடர்பாக நாம் ஜி.ரி.வி ஜேர்மனி நாட்டு பொறுப்பாளர் சிவலிங்கத்திடம் விசாரித்தபோது தான் இலங்கை தூதுவராலயத்துக்கு போய் சந்திப்பை நடாத்தியது உண்மைதான் என்றும் ஆனால் அது ஒரு திருமணத்துடன் சம்மந்தபட்ட விடயம் எனவும் மேலும் தன்னை சந்தித்து கலந்துரையாடிய இலங்கை தூதுவராலய அதிகாரி தன்னை வடமராட்சி என கூறி அறிமுகபடுத்தியதாகவும் எமக்கு தெரிவித்தார்.
இத்தகைய நட்புறவான உறவாடல்கள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் ஜீ.ரி.வி ஜேர்மனி நிர்வாகி தொடர்பாக சந்தேகத்தை பலப்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.