பக்கங்கள்

11 மே 2011

மகளின் கைபேசியில் ஆபாசப்படம்,தந்தை தற்கொலை.

தனது மகளின் கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது மனைவி, மகளுடன் பார்வையிட்ட தந்தை தன்னனைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கொக்கரல்லை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கொக்கரல்லை ஜனபாகமன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஜே.ஏ.சுகத்தபால எனப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
கொக்கரல்லை பிரதேச பாடசாலையில் மகள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகளின் கையடக்க தொலைபேசி பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அதில் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தமை கண்டறிப்பட்டமையாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் குறித்த அதிபர் மாணவியின் பெற்றோரை பாடசாலைக்கு வரவழைத்து அவர் முன்னிலையிலேயே குறித்த வீடியோ காட்சிகளை பெற்றோருக்கு காண்பித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வீட்டுக்கு சென்ற தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொக்கரல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.