பக்கங்கள்

06 மே 2011

சிவாஜிலிங்கம் பொலிஸ் விசாரணையில்.

முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், உள்ளுராட்சி சபை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது வல்வெட்டித்துறை இராணுவ முகாம் உயரதிகாரிகளும் பங்கெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் தனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த அழைப்பிற்கு அமைவாக அங்கு சென்ற போது பொலிஸார் மட்டுமல்லாமல் இராணுவத்தினரும் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார்.
'வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தையும் அங்குள்ள இராணுவ முகாம்களையும் தற்போதுள்ள இடங்களிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என கட்சியின் உள்ளுராட்சித் சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் அவர்களுக்குக் கிடைத்த தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அதற்கு தனது தெளிவான விளக்கத்தை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.