பக்கங்கள்

28 மே 2011

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வருகிறது தமிழர் தீர்மானம்.

முதல் முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர். குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடொன்றை முதல்முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தில் யூன் முதலாம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிபுற்று இரண்டு வருடங்களாகியும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது.
யூன் முதலாம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம்மாநாட்டில் போல் மேர்ஃபி உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் போருக்குப் பின்னர் எவை நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் நடைபெறாமல் இருக்கும் விடயங்கள் எவையெனவும் அலசி ஆராயப்படவுள்ளது. தமிழ் சொலிடாரிட்டி இயக்கம் பல அமைப்புக்களுடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.