பக்கங்கள்

04 மே 2011

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் தீர்த்தக்கேணியில் சிறுவனின் சடலம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலிலுள்ள இந்தன் முத்துவிநாயகர் கோயில் தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை புளியங்கூடலைச் சேர்ந்த எ.எழிலரசன் என்ற 10 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
நேற்று காலை மேற்குறித்த கோயிலில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவிற்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாமையால் அவனது பெற்றோர் ஊரெங்கும் தேடியவேளை சிறுவன் தீர்த்தக்கேணியில் சடலமாக இருப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அச்சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.