பக்கங்கள்

04 மே 2011

புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லுமாறு தமது அரசு உத்தரவிடவில்லை என்கிறார் ஜெயரத்ன.

பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமையானது சர்வதேச சட்டங்களை மீறவில்லையாவென ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன கேள்வியெழுப்பினார்.
கட்டளையொன்றை வைத்திருக்கின்றோம் என்ற சாட்டில் வேற்று நாடொன்று இறைமையுள்ள ஒரு நாட்டினுள் புகுந்து ஒருவரை கொல்லமுடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகாரனை கொல்லுமாறு நாங்கள் ஒருபோதும் உத்தரவிடவில்லை. யுத்தம் நடைபெற்ற வேளையில் அவர் மரணமடைந்தார்.
இது தான் இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையிலான வித்தியாசம். ஒசாமா பின்லேடனின் சடலம் அவர்களுடைய பாதுகாப்பிலேயே உள்ளது' என புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.