பக்கங்கள்

05 மே 2011

பீரிசின் கூற்றில் உண்மையில்லை என ஐ.நா.தெரிவிப்பு.

ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அதனையும் வெளியிடுவோம் என நெசக்கி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.