பக்கங்கள்

25 மே 2011

எஸ்.பி.திசாநாயக்க ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதர்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க ஒரு ஒழுக்கம்கெட்ட மனிதர் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சி தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், மல்வத்த பீட மகாநாயக்கரை சந்திக்கச் சென்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மகாநாயக்கர்களின் ஆலோசனைகளைக் கேட்பதில்லை. இதற்கு முன்னரும் நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் தாம் நினைத்ததை செய்ய முற்படுவதனாலேயே இவ்வாற நிலைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் நிலை மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் பிக்கு மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பாக எஸ்.பி.திசநாயக்க வெளியிட்ட கருத்து தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.