பக்கங்கள்

03 மே 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த ரொபேர்ட் ஓ பிளேக்.

நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் வந்த மறுகனமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இரவு 8 மணி முதல் 9.30 மணியளவு வரை நடைபெற்றுள்ளது.
இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதுடன், தமிழருக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.