பக்கங்கள்

20 மே 2011

கனிமொழியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.

ஸ்பெக்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் இருவரது ஜாமீன் மனுக்களும் நிரகாரிக்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக இருவரையும் கைது செய்யும் படி டில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று நண்பகல், வெளியிடப்பட்ட இத்தீர்ப்பில், இருவரையும் கைது செய்து கஸ்டடியில் வைக்கும் படியும், நாளை காலை 10 மணிக்கு முன்பதாக மீண்டும் ஆஜர்படுத்தும் படி சி.பி.ஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.