பக்கங்கள்

29 மே 2011

யாழ் நகரில் கடை தீயில் எரிந்தது.

யாழ்.நகரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் திடிரென்று சற்று முன்னர் காஸ் சிலிண்டர் ஒன்று தீ பிடித்து எரிந்ததால் பெறுமதியான பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று மதியம் 1 மணியளவில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையமென்றிலேயே இவ்வாறு தீ பிடித்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் வேறு இடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிர் இழப்புகள் எவையும் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.