பக்கங்கள்

05 மே 2011

யாழில் சிசுக்களுக்கு நிகழும் கொடூரங்கள்.

யாழில் பிறந்து ஒருநாளில் இறந்த சிசுக்களின் சடலங்கள் மூன்று யாழ்.போதன வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பணிப்பில் பரிசோதனைக்காக இன்று வியாழக்கிழமை யாழ்.போதன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது
யாழ்.சுன்னாகம் பகுதியிலிருந்து ஒரு சிசுவையும், அல்வாய்ப் பகுதியிலிருந்து இன்னொரு சிசுவையும் மற்றும் இளவாலைப் பகுதியிலிருந்து மற்றைய சிசுவும் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சிசுக்களின் மரணம் தொடர்பாக மருத்துவப்பரி சோதனை செய்யப்படவுள்ளதாகவும் மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் குறித்து சிசுக்களின் தாயாரிடம் விசாரனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.