பக்கங்கள்

11 மே 2011

ஆசிரியையிடம் கற்பை கப்பமாக கேட்ட அதிகாரி கைது.

இடமாற்றம் பெற்று தருவதாயின் தனது விரும்பத்திற்கு இணங்கவேண்டும் என தெரிவித்து ஆசிரியை ஒருவருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட வடமேற்கு மாகாணசபையின் கல்வி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் குருநாகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றை சோதனையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த கல்வி அதிகாரியிடமும், அவருடன் இருந்த ஆசிரியையிடமும் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
தனது இடமாற்றம் தொடர்பில் கல்வித்திணைக்களத்திற்கு சென்றபோதே தான் குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்ததாக ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் இடமாற்றம் கேட்டுச் செல்லும் பல ஆசிரியைகளிடம் குறிப்பிட்ட கல்வி அதிகாரி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.