பக்கங்கள்

21 மே 2011

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக ஊரெழுவை சேர்ந்த தமிழர்?

சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், நீதியமைச்சருமான தர்மன் சண்முகரட்ணத்தை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணம் ஊரெழுவைப் வழித்தோன்றலாகக் கொண்ட இவர் 2007ஆம் ஆண்டு முதல் சிங்கப் பூரின் நிதியமைச்சராக செயலாற்றி வருவதோடு இவரை துணைப் பிரதமராக கடந்தவாரம் அந் நாட்டுப் பிரதமர் லீ சென் லூம் நியமித்திருந்தார்.
சிங்கப்பூரின் முக்கிய அரசியற் பிரமுகர்களில் ஒருவரான தர்மன் சண்முகரட்ணம் நேற்று முன்தினம் (19.05.2011) சிங்கப்பூர் நிதி ஆணை யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இவரை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநராக நியமிக்க வேண்டும் என பிலிப்பை ன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்கு நர் பதவியிலிருந்து டொமினிக் ஸ்டி ராஸ் கான் ராஜினாமாச் செய்துள்ள நிலையில், இப் பதவியை தர்மன் சண்முகரட்ணத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.