பக்கங்கள்

04 மே 2011

வெள்ளைக்கொடி ஏந்தி வருபவர்களை அமெரிக்கப் படையினர் கொல்வதில்லை.

அல் கய்தா இயக்கத்தின் தலைவர் பின் லேடன் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முயற்சிக்கவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் உயிருடன் கைது செய்திருப்பார்கள் என அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு செவ்வியளித்துள்ளார்.
எனினும், பின் லேடனை கொலை செய்யும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை உயிருடன் கைது செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகாமையில் அமெரிக்க கொமான்டோக்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பின் லேடன் பங்குபற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின் லேடன் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுக் கூறவில்லை என்ற போதிலும் 40 நிமிட மோதல்களின் பின்னர் பின் லேடனின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின் லேடன் கைது செய்யப்படுவதனை விடவும் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரணடைய முயற்சி செய்யும் நபர்களை கொலை செய்வதற்கு அமெரிக்க துருப்பினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க வான்படை துருப்பினர்களே ஒசாமா மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒசாமா உயிரிழந்ததனை உறுதிப்படுத்தும் நோக்கில் இரசாயன பகுப்பாய்வு அதிகாரியொருவரையும் அழைத்துச் சென்றதாக அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.