பக்கங்கள்

24 மே 2011

நெடியவன் கைது தனக்கு ஆறுதல் என்கிறார் இமெல்டா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தாம் மிகுந்த மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக எமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவை கட்டுப்படுத்திய காலத்தில் எமில்டா சுகுமார் அந்தப் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவை தொடர்பில் மக்களும் அரசாங்கமும் கொண்டுள்ள நம்பிக்கை தமக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.