பக்கங்கள்

12 மே 2011

யாழ்,மாணவிக்கு சிங்களத்தால் நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 19 வயது பாடசாலை மாணவியொருவர் சிங்கள இளைஞர்களால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமாராட்சி பிரதேசத்தின் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியை கடந்த திங்கட்கிழமை வெள்ளை வானில் வந்த 3 சிங்கள இளைஞர்கள் கடத்தி சென்றனர்.
கடத்திச்சென்றவர்கள் மாணவியை தனிச் சிங்களப் பிரதேசமான மஹியங்கனைக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரது தலை முடியையும் வெட்டியுள்ளதோடு அவரை அறையொன்றில் கட்டி வைத்துள்ளனர்.
அவர்களின் பிடியில் இருந்து தப்பிய மாணவி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாணவியை நேற்று முன்தினம் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஆயினும் இச் சம்பவம் தொடர்பாக சிங்கள இளைஞர் ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.
குறித்த மாணவியின் தந்தை காலமாகி விட்டார் என்பதோடு குறித்த மாணவி இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.