பக்கங்கள்

23 ஜூலை 2010

இலங்கை அரசை கண்டித்து லண்டனில் போராட்டம்.




நீதியும் , சுதந்திரமுமான யுத்தக் குற்ற விசாரணை இலங்கையில் நடத்தப்பட வேண்டும், இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை சென்று எவரும் பார்வையிடக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும், இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடக்கும் வரை அந்நாட்டை புறக்கணிக்க வேண்டும் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை இன்று இரவு நீதிக்கான பயணம் என்கிற பெயரில் லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது.


இந்தப் போராட்டம் ரொட்ஹில் வீதியில்(வெஸ்ட் மினிஸ்ரர் மெதடிஸ்த் தேவாலயத்துக்கு அருகில்) லண்டன் நேரம் இரவு 9.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை இடம்பெற உள்ளது.


புலம்பெயர் தமிழர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.