பக்கங்கள்

29 ஜூலை 2010

திருமலை பத்திரகாளி ஆலயத்தின் முன் சிங்களவர்களின் கூத்து.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை பெரும்பான்மை இன இளைஞர் குழுக்களால் "பைலா" ஆட்ட நிகழ்வுகள் மாறி மாறி இடம்பெற்றன.


திருமலை ஸ்ரீறிமாபுரத்தில் உள்ள விகாரை ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றுக்காக நீர்கொழும்பு,சிலாபம் போன்ற இடங்களில் இருந்து 15 இற்கும் அதிகமான பெளத்த இளைஞர் குழுக்கள் திருமலைக்கு வந்துள்ளன.


இந்த ஒவ்வொரு குழுவையும் சேர்ந்த இளைஞர்கள் வெவ்வேறு நேரங்களில் பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக வந்து பைலா ஆடினார்கள். வழிபாட்டுக்குரிய ஆலயத்துக்கு முன்னால் அவர்கள் பைலா ஆட்டம் போட்டமை தமிழ்-இந்துக்களை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.