பக்கங்கள்

17 ஜூலை 2010

தமிழின உணர்வாளர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க தமிழர்கள் முன்வரவேண்டும்!


நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தேசியபாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துதடுத்து வைத்திருப்பதானது,தமிழர் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்ற பெரும்வலியை ஏற்படுத்தியிருக்கிறதென்பதே உண்மை,சிங்கள இந்திய கூட்டுச்சதியால் ஆயிரக்கணக்கான தமிழர்கள்கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்,பல்லாயிரக்கணக்கானதமிழர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள்,இன்றும் கூடதமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையிலும்,தமிழக மீனவர்கள்கூட தாக்குதலுக்குள்ளாகி கொண்டிருக்கும்நிலையிலும்,தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து பிழைப்புவாதஅரசியல் நடத்தும் கருணாநிதி கண்டுகொள்ளவேயில்லை.அதற்கு நேர்மாறாக தமிழினத்தின் உரிமைக்குரலாய் ஒலிப்பவர்களையெல்லாம்அடக்கி ஒடுக்க்கி சிங்களனுக்கு நிகரான செயற்பாட்டையே கருணாநிதி அரசும்செய்துகொண்டிருக்கிறது.இன்று நாம் சிங்கள அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த தமிழர்கள் இன்று இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக கருணாநிதி அரசுக்கு எதிராகவும்ஜனநாயக ரீதியில் போராடவேண்டிய காலகட்டம் இதுவென்பதைஒவ்வொரு உணர்வுள்ளதமிழனும் புரிந்து செயற்படவேண்டும்.செந்தமிழன் சீமான் உட்பட கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழின உணர்வாளர்களினதும் விடுதலைக்காக குரல் கொடுக்கஎம் தமிழ் சமூகம் முன் வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.